Tuesday, December 22, 2009

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

zwani.com myspace graphic comments


இன்றைய துருக்கியில் முன்பொருநாள் ஒரு செல்வந்தன் சொத்தையெல்லாம் இழந்து தெருவில் நின்றான்வறுமையில் வாடிய அவனுக்குத் தன் மகள்களை காப்பாற்றுவதே இறுதி முடிவாயிருந்தது. இதை அறிந்த ஒரு பாதிரியார் அவருக்கு பொருள் உதவி செய்தாராம்.

இந்தப் பின்னணியில் துவங்கியதுதான் கிறிஸ்துமஸ் தாத்தாவென நாம் அழைக்கும் 'சான்டா க்ளாஸின்' கதைஅந்தப் பாதிரியாரின் பெயர் செயின்ட் நிக்கோலாஸ், பின்னர் மருவி சான்டா க்ளாசாக உருப் பெற்றதுசெயின்ட் நிக்கொலாஸ் தனது சொத்து முழுவதையும் தானம் செய்வதில் செலவழித்தவர்.

கிறிஸ்துமஸ் தாத்தா இன்று உலகெங்கும் கிறிஸ்துமசின் அடையாளங்களில் ஒன்றாய் காணப்படுகிறார். வடதுருவம்தான் இவரின் ஊர்ஆண்டு முழுவதும் இவரது இருப்பிடத்தில் பரிசுப்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றனஇவருக்கு உதவியாக பல குள்ளர்கள்(எல்வ்ஸ்) வேலை செய்கிறார்கள்கிறீஸ்துமஸ் தினத்தன்று இவர் ஒன்பது மான்கள் இழுத்துச்செல்லும் பறக்கும் பனிரதத்தில் உலகெலாம் சென்று பரிசுகளை வழங்கிவருகிறார்.

இரவோடு இரவாக புகைபோக்கி வழியே நுழைந்து கிறிஸ்மஸ் மரத்தின் அருகே தொங்கவிடப்பட்டிருக்கும் காலுறைகளுக்குள் பரிசுகளை விட்டுப் போவது இவரது வழக்கம்.

பரிசுக்கள் எல்லோருக்கமல்லஆண்டு முழுதும் நல்லவர்களாயிருக்கும் பிள்ளைகளுக்கு மட்டுமே என்பது வருந்தத்தக்க கிளை செய்திகிறிஸ்மஸ்தாத்தா கற்பனையில் புனையப்பட்ட ஒரு பாத்திரம் என உணர்வதற்கு குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 10 வருடம் பிடிக்கிறது.

நம் ஊர்களில் புகைபோக்கிகள் இல்லாததாலோ என்னவோ இங்கே கிறிஸ்மஸ்தாத்தா கொடுப்பவராக இல்லாமல் வாங்குபவராகவே வருகிறார். வீடு வீடாகச் சென்று கிடைக்கும் பண்டங்களை பங்கிடுவதும் காசு பிரிப்பதும் இங்கே கிறிஸ்மஸ்கால கொண்டாட்டங்களில் கலந்துவிட்டிருக்கும் வேடிக்கைகளில் ஒன்று. லாரி ஒன்றை வாடகைக்கமர்த்திக்கொண்டு ஊர் ஊராக பாடல் பாடிக்கொண்டே செல்பவர்களும் உண்டு.

கிறிஸ்மஸ் காலத்திற்கென்றான பாடல்கள் 'காரல்ஸ்' (Carols) என வழங்கப்படுகின்றன. வருடாவருடம் வீடு வீடாகப் போய் இனிய கிறீஸ்து பிறப்பின் பாடல்களைப் பாடி மகிழ்ந்து, மகிழ்விக்கும் பாடற்குளுக்களுக்கும் நன்கொடைகளும் இனிப்புகளும் வழங்கப்படும்.

கிறிஸ்துமஸ் இசை எனக்குப் பிரியம். ஆங்கிலத்தில் உலகப் பிரசித்தி பெற்ற 'Silent night', 'Jingle Bells', 'Hark the herald', 'Joy to the world', 'Away in a Manger', 'Mary's boy child' போன்ற பாடல்கள் எப்போதும் அமெரிக்க வானொலிகளில் இதமாய் ஒலிக்கின்றன .

பனிக்காலத்தில் வரும் கிறிஸ்துமசை எதிர்பார்க்கும் 'I'm dreaming of a white Christmas', 'எப்படியாவது பண்டிகைக்கு வீட்டுக்குவந்துவிடுவேன்' என ஏக்கத்துடன் அறிவிக்கும் 'I will be home for Christmas', கிறிஸ்மஸ்தாத்தாவின் வருகையைச் சொல்லி மகிழும் 'Santa Claus is in town' என எண்ணங்களில் விளையாடும் பாடல்களை இந்தக் காலங்களில் கேட்கமுடிகிறது.

கிறிஸ்துமசை அடுத்து புது வருட பிறப்பு. நல்ல புது பழக்கங்களை பழகவும் சில கெட்டவைகளை களையவும் இது நல்ல தருணம். புதுவருட தீர்மானங்களில் ஒன்றாய் சக மனிதரை மதித்து நடப்பது எனும் உயரிய கோட்பாட்டை எடுக்கலாம். எளிதில் சொல்லிவிட முடிகிறது என்றாலும் எல்லோரும் முயலவேண்டிய ஒன்று. மனித உயிருக்கு, மனிதனுக்கு மதிப்பு குறைந்து வருவதை கண்கூடாஅகப் பார்க்கிறோம். வரும் வருடத்தில் இதைக் களைய நம்மால் ஆனதைச் செய்வோம்.

மகிழ்ச்சிக் கொண்டாட்டங்கள் மனம் நிறைக்கும் இந்த பண்டிகைக் காலங்களில் அவற்றின் உள் அர்த்தங்களை மறந்துவிட வாய்ப்பிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா பண்டிகைகளுமே வியாபாரமயமாக்கப்பட்டுவிட்டன. பண்டிகையென்ன, வாழ்க்கையே வியாபாரமயமாகிவிட்டது.

கிறிஸ்துமஸ் பகிர்தலின் பண்டிகை. நமக்கு கொடுப்பவருக்கே திருப்பிக் கொடுப்பதில் என்ன இருக்கு? இல்லாதவருக்கு அருள்வதே சிறப்பு எனச் சொன்ன இயேசுவின் பிறந்த நாளை எப்படிக் கொண்டாடவேண்டும் என்பதை சொல்லித் தெரிவதில்லை.

கொண்டாட்டங்கள் எல்லாம் கொடுப்பதிலே நிறைவுபெறட்டும்.

அனைவருக்கும் இனிய இயேசு பிறப்பு மற்றும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

நன்றி : தமிழோவியம்

2 comments:

geethappriyan said...

அருமை நண்பர் கோபிநாத் உங்களுக்கும் என் கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்,இறைவன் அருள் கிட்டட்டும்.

M.S.R. கோபிநாத் said...

@ நன்றி கார்திக்கேயன். வாழ்த்துக்கும் நன்றி.